/* */

சிக்னல் பகுதியில் ரோட்டை அடைத்து நிற்கும் இருசக்கர வாகனங்களால் அவதி

மலுமிச்சம்பட்டி சிக்னல் அருகே ரோட்டை அடைத்து நிற்கும் இருசக்கர வாகனங்களால் அவதியடைந்து வருகின்றனர்

HIGHLIGHTS

சிக்னல் பகுதியில் ரோட்டை அடைத்து நிற்கும் இருசக்கர வாகனங்களால் அவதி
X

தாறுமாறாக நிறுத்தப்பட்டுள்ள இருசக்கர வாகனங்கள் 

கோவை பொள்ளாச்சி சாலையில் கற்பகம் கல்லூரி சிக்னலுக்கு அடுத்தபடியாக மலுமிச்சம்பட்டி சிக்னல் அமைந்து உள்ளது. இது நான்கு ரோடுகள் சந்திக்கும் முக்கியமான பகுதி ஆகும். இந்த சந்திப்பில் இருந்து நான்கு புறமும் உள்ள சாலைகள் கேரளா, செட்டிபாளையம், கோவை மற்றும் பொள்ளாச்சி ஆகிய பகுதிகளுக்கு செல்கிறது.

மலுமிச்சம்பட்டி சிக்னல் பகுதியை சுற்றிலும் ஏராளமான சிறிய கிராமங்கள் உள்ளன.அந்த பகுதியில் வசிப்பவர்கள் பொருட்கள் வாங்குவதற்காக அடிக்கடி மலுமிச்சம்பட்டிக்கு வந்து செல்கின்றனர். அப்போது அவர்கள் சிக்னல் பகுதியில் இருசக்கர வாகனங்களை தாறுமாறாக நிறுத்திவிட்டு செல்கின்றனர்.

இதனால் கோவை-பொள்ளாச்சி செல்லும் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் செட்டிபாளையம்-மலுமிச்சம்பட்டி செல்லும் வாகனங்கள் ஆகியவை போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் நிலை உள்ளது.

மேலும் அப்பகுதியில் எண்ணற்ற பேக்கரி மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளன. அந்த கடைகளுக்கு செல்லும் வாடிக்கையாளர்களும் தங்களின் வாகனங்களை அப்படியே நிறுத்திவிட்டு செல்வதால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் ஒன்றுக்கொன்று உரசும் நிலையில் செல்கின்றன. இதனால் அந்த பகுதியில் தினமும் சிறு விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.

இதுகுறித்து அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறுகையில், மலுமிச்சம்பட்டி சிக்னலுக்கு எதிரில் புறக்காவல் நிலையம் உள்ளது. ஆனால் அவர்கள் இந்த வாகனங்களை கண்டுகொள்வதில்லை. காவல்துறையினர் வாகனங்களை முறைப்படுத்தி நிறுத்த வைத்தால், அந்த பகுதியில் போக்குவரத்து எளிதாக இருக்கும்.

மேலும் அங்கு ஒருசில நேரங்களில் டபுள்பார்க்கிங் போடும் வாய்ப்பு ஏற்படுவதால் வாகனத்தை எடுக்க முடியாமல் ஒருசிலர் தவிக்கும் சூழல் ஏற்படுகிறது. மேலும் மற்ற வாகனஓட்டிகளிடம் வாக்குவாதம் செய்யும் சூழ்நிலையும் ஏற்படுகிறது.

பொள்ளாச்சி, பழனி செல்லும் அரசு பேருந்துகள் மலுமிச்சம்பட்டி சிக்னல் அருகே அதிவேகமாக வருகின்றன. அப்போது அவை தாறுமாறாக நிற்கும் வாகனங்களை அப்புறப்படுத்தும் வகையில் ஏர்ஹாரன் ஒலி எழுப்புகின்றனர். இதனால் அந்த பகுதியில் எப்போதும் அதிகமானஒலிகளை கேட்க முடிகிறது.

எனவே போக்குவரத்து காவல்துறையினர் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு, மலுமிச்சம்பட்டி சிக்னல் பகுதியில் இருசக்கர வாகனத்தை முறைப்படுத்தி நிறுத்தி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அப்போது தான் அந்த பகுதியில் போக்குவரத்து சீராகும். பிறருக்கும் இடையூறு இருக்காது என கூறினர்

Updated On: 14 Nov 2023 4:21 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் ராசாத்தி நீ வாழணும், அதை எந்நாளும் நான் பார்க்கணும் - பாடல்...
  2. வீடியோ
    🔴 LIVE : நான் இங்க சும்மா வந்து உட்காரல | Karunas ஆவேச பேச்சு ! |...
  3. திருவண்ணாமலை
    ஜெகன்மோகன் ரெட்டி மீண்டும் ஆட்சி அமைப்பார்: ரோஜா நம்பிக்கை
  4. தமிழ்நாடு
    4வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் தற்கொலை
  5. வீடியோ
    தயாரிப்பாளருக்கும் ஒன்னும் இல்ல படைப்பாளருக்கும் ஒன்னும் இல்ல !#seeman...
  6. வீடியோ
    அரசே எல்லாம் பண்ணிட்டு இப்போ ஆக்கிரமிச்சுட்டாங்கனு சொல்றாங்க !#seeman...
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் 1.5 கோடி ரூபாய் கொள்ளை; பொய் புகார் தந்த பாஜக நிர்வாகி
  8. வீடியோ
    அரசுக்கு சாராயத்தை தவிர வேற என்ன வருமானம் இருக்கு !#seeman...
  9. ஆன்மீகம்
    சங்க தமிழ் மூன்றும் தருபவனே, விநாயகா..!
  10. சூலூர்
    கோவை அருகே கருமத்தம்பட்டியில் 14 கிலோ கஞ்சா பறிமுதல் :3 பேர் கைது