/* */

பொள்ளாச்சி: வழக்கு பதியாமல் இருக்க லஞ்சம் பெற்ற சிறப்பு எஸ்.ஐ. சஸ்பெண்ட்

பொள்ளாச்சி அருகே நெகமத்தில், சூதாட்டம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க, 7 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற, சிறப்பு உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

HIGHLIGHTS

பொள்ளாச்சி: வழக்கு பதியாமல் இருக்க லஞ்சம் பெற்ற  சிறப்பு எஸ்.ஐ. சஸ்பெண்ட்
X

பணியிடைநீக்கம் செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் ஏசுபாலன்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த நெகமம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக ஏசுபாலன் என்பவர் பணியாற்றி வந்தார். இவருக்கு, சில தினங்களுக்கு முன்பு மெட்டுபாவி கிராமத்தில் சிலர் சட்ட விரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில், சூதாடியவர்களை சுற்றிவளைத்து பிடித்துள்ளார். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க ரூபாய் 7 ஆயிரத்து லஞ்சமாக பெற்றுள்ளார். இதுகுறித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினத்திற்கு புகார் சென்றுள்ளது.

லஞ்சம் பெற்ற புகார் குறித்து விசாரித்த போது வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க சிறப்பு உதவி ஆய்வாளர் ஏசுபாலன் லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஏசுபாலனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவிட்டார்.

Updated On: 22 Jun 2021 4:46 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...
  2. வீடியோ
    DMK-வில் புல்லுருவிகளை களையெடுக்க மீண்டும் இறக்கப்படுகிறார் Prashant...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  5. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  6. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  7. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  8. சோழவந்தான்
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் தேரில் பொம்மைகள் கண் திறப்பு
  9. இராஜபாளையம்
    தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி ஆலய வைகாசி விசாக திருவிழா
  10. திருப்பரங்குன்றம்
    ஆறுமுக மங்கலம் வெள்ளாளர் உறவின் முறை சங்க டிரஸ்ட் புதிய நிர்வாகிகள்...