/* */

பழங்குடியின மாணவர்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கக்கோரி எஸ்எப்ஐ ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு பழங்குடியின மாணவ மாணவிகள் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

பழங்குடியின மாணவர்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கக்கோரி எஸ்எப்ஐ ஆர்ப்பாட்டம்
X

இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு பழங்குடியின மாணவ மாணவிகள் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் ஜாதி சான்றிதழ் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர். மனுவில் பழங்குடியின மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசு உடனடியாக ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும், வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகையை அதிகரித்து வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளுக்கு பேருந்து வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும், பொள்ளாச்சி அரசு கல்லூரியை விரிவுபடுத்தி அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினர். மேலும் குடியிருப்புகளுக்கு மின்வசதி மற்றும் ஆழியாறு மற்றும் ஆனைமலை பகுதிகளில் புதிய உண்டு உறைவிடப்பள்ளி துவக்க வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

Updated On: 14 Sep 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்