/* */

திதி கொடுக்க சென்றவர்களை தேனீ கொட்டியதில் ஒருவர் பலி : 13 பேர் காயம்

தேனீ கூட்டில் புகைபட்டவுடன் கூடு கலைந்ததால் தேனீக் கூட்டம் ரமேஷின் குடும்பத்தார் மீது கொட்டியது.

HIGHLIGHTS

திதி கொடுக்க சென்றவர்களை தேனீ கொட்டியதில் ஒருவர் பலி : 13 பேர் காயம்
X

பலியான ரமேஷ்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே குரும்பபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் அப்பகுதியில் கறிக்கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த சில தினங்கள் முன்பு அவரது பாட்டி காலமாகியுள்ளார். இதையடுத்து இன்று 16ம் நாள் ஈமா காரியம் செய்ய குடும்பத்தினருடன் அம்பாரபாளையம் பகுதி ஆற்றின் கரையோரம் ஓமாம் குண்டம் வளர்த்தி உள்ளனர். அப்போது எதிர்பாரவிதமாக காற்றில் புகை பரவி உள்ளது. பாறையின் மேலே தேனீ கூட்டில் புகைபட்டவுடன் கூடு கலைந்ததால் தேனீக் கூட்டம் ரமேஷின் குடும்பத்தார் மீது கொட்டியது.

தேனி கொட்டியதால் குடும்பத்தார் கலைந்து ஓடியுள்ளனர். அருகில் திதி கொடுத்த நபர்கள் மீதும் தேனீ கொட்டியது. தேனி கொட்டியதால் ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த பொள்ளாச்சி தாலுகா காவல் நிலைய போலீசார் தேனீ கொட்டிய 13 பேரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

Updated On: 27 Aug 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  2. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  3. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  4. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  5. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  7. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  8. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  9. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை