/* */

துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மீது வழக்குப்பதிவு

பொள்ளாச்சி ஜெயராமன் அவரது மகன் பிரவீன் உட்பட 8 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

HIGHLIGHTS

துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மீது வழக்குப்பதிவு
X

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள ஓக்கிலிபாளையம் ஊராட்சியில் திமுக வேட்பாளரை ஆதரித்து பெண் விடுதலை கட்சியைச் சேர்ந்த சபரிமாலா தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது பெண்கள் பாதுகாப்பு குறித்தும், பொள்ளாச்சி பாலியல் பிரச்சினை பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்க திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அப்போது வந்த அதிமுகவினருக்கும், திமுகவினருக்கும் மோதல் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடக்கிபாளையம் காவல் நிலைய போலீசார் இரு தரப்பினரிடையே பேசி சமாதானப்படுத்தி கூட்டதை கலைத்தனர்.

பொள்ளாச்சி ஜெயராமன் தூண்டுதலின் பேரில் தகாத வார்த்தைகளில் பேசி காரை ஏற்றி கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்ததாக திமுக ஒக்கிலிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பார்த்தசாரதி வடக்கிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் காவல் துறையினர் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அவரது மகன் பிரவீன் உட்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 30 March 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...