/* */

பெரியநாயக்கன்பாளையம் மகா மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

பெரியநாயக்கன்பாளையத்தில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று விமர்சையாக நடைபெற்றது

HIGHLIGHTS

பெரியநாயக்கன்பாளையம் மகா மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
X

மகா மாரியம்மன் கோவிலில் விமான கலசங்களுக்கு புனித நீரூற்றி கும்பாபிஷேக விழா நடைபெற்றது

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா கடந்த 20-ம் தேதி காலை 4.30 மணிக்கு மங்கள இசையுடன் தொடங்கியது.

தொடர்ந்து திருவிளக்கு வழிபாடு, புனித நீர் வழிபாடு, விநாயகர் வேள்வி, கோமாதா வழிபாடு, அடியார்கள் காப்பணிதல், முளைப்பாரியை ஊர்வலம், தீர்த்த குடங்கள், விமான கலசங்கள் ஊர்வலம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து திருவிளக்கு வழிபாடு, நிலத்தவர் வழிபாடு, புற்று மண் எடுத்து வருதல், திருக்குடங்கள் கேள்வி சாலைக்கு புறப்பாடு, முதலாம் கால வேள்வி பூஜைகள், 108 வகையான காய்கனி கிழங்கு உள்ளிட்ட மூலிகை பொருட்கள், மலர் வழிபாடு, திருமுறை இசைத்தல் நடைபெற்றது.

நேற்று காலை 6 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி, இரண்டாம் கால வேள்வி, ராகம், தாளம் வாசித்தல், பிரசாதம் வழங்குதல், மூன்றாம் கால வேள்வி பூஜைகள் நடை பெற்றது. காலை 8 மணிக்கு திருமஞ்சனம், 9 மணிக்கு விமான கலசம் நிறுவுதல், 10 மணிக்கு நான்காம் கால வேள்வி பூஜைகள், மலர் வழிபாடு, திருமுறை இசைத்தல் மாலை 6 மணிக்கு ஐந்தாம் கால வேள்வி பூஜைகள், இரவு 7 மணிக்கு அம்மனுக்கு என் வகை மருந்து சாற்றுதல் நடைபெற்றது.

இன்று அதிகாலை 4:30 மணிக்கு ஆறாம் கால வேள்வி பூஜைகள், 6:15 மணிக்கு திருக்குடங்கள் கோவிலை வந்து அடைதல், 6.45 மணிக்கு விமான கலசங்களுக்கும், 7.15 மணிக்கு மூர்த்திகளுக்கும் புனித நீரூற்றி கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

தொடர்ந்து அம்மனுக்கு அலங்கார பூஜைகள், அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் பெரியநாயக்கன்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு அம்மன் அருள் பெற்றனர். மேலும் ஞாயிற்றுக்கிழமையில் இருந்தே கும்பாபிஷேக நாளான இன்றுவரை அன்னதான நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள், இந்துசமய அறநிலைத்துறை, பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி நிர்வாகம், ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்து இருந்தனர். மேலும் மருத்துவக்குழுவினர், காவல்துறை, தீயணைப்புதுறை என அனைவரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Updated On: 24 May 2023 4:09 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...