கோவை மாநகராட்சியில் நாளை தடுப்பூசி உண்டா? அதிகாரிகள் விளக்கம்

கோவை மாநகராட்சியில் நாளை தடுப்பூசி உண்டா?  அதிகாரிகள் விளக்கம்
X
தடுப்பூசி இருப்பு குறைவு காரணமாக, கோவை மாநகராட்சியில் நாளை தடுப்பூசி முகாம் நடைபெறாது என்று, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவை மாநகராட்சியில் கொரோனா தொற்று பரவலில் இருந்து பாதுகாக்க, பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாநகராட்சி பகுதிகளில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடந்து வந்தன. பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

இந்த நிலையில், தடுப்பூசி இருப்பு குறைவு காரணமாக பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. கோவை மாநகராட்சியில் கடந்த இரண்டு நாட்களாக தடுப்பூசி பொதுமக்களுக்கு போடப்படவில்லை. இந்நிலையில் நாளையும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறாது என்றும், பொதுமக்கள் யாரும் முகாம் இடத்திற்கு வந்து காத்திருக்க வேண்டாம் என்று, கோவை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story