கோவை மாநகராட்சியில் நாளையும் கொரோனா தடுப்பூசி இல்லை

கோவை மாநகராட்சியில் நாளையும் கொரோனா தடுப்பூசி இல்லை
X
தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக, கோவை மாநகராட்சியில் நாளை தடுப்பூசி முகாம் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள பொதுமக்கள் தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கோவை மாநகராட்சி பகுதியில், சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடந்து வந்தன. பொதுமக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

இதனிடையே தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக, அவ்வப்போது தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்படுகின்றன. பத்து நாட்களுக்கு பிறகு, கடந்த 12 மற்றும் 13 ம் தேதிகளில், 31 முகாம்களில் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்றன. தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக இன்று தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெறவில்லை.

இந்நிலையில், தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக நாளையும் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறாது என, கோவை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
ai in future agriculture