/* */

ஆதார் கார்டில் பெயரை மாற்ற அலைக்கழிப்பதாக பொதுமக்கள் புகார்

ஆதாரில் பெயர் திருத்தம் செய்ய, அன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதாக, புகார் எழுந்துள்ளது.

HIGHLIGHTS

ஆதார் கார்டில் பெயரை மாற்ற  அலைக்கழிப்பதாக பொதுமக்கள் புகார்
X

ஆதார் கார்டு திருத்தம் செய்ய, அன்னூர் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் பொதுமக்கள்.

கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், ஆதார் கார்டில் பெயரில் பிழைகளை திருத்த, முகவரி மாற்றம் செய்ய, அன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும். அங்கு தினமும் காலை 100 க்கும் மேற்பட்டோர், இதற்காக வருகின்றனர்.

ஆனால், அங்கு 50 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படுவதாகவும், மீதம் இருப்பவர்களை அடுத்த நாள் வாருங்கள் என்று சொல்லி, திரும்பி அனுப்பி விடுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஆதார் கார்டு பதிவு செய்யும் பணியில் உள்ள நபர்கள், தங்களுக்கு தெரிந்த நபர்களுக்கு டோக்கன்கள் இல்லாமல், ஆதார் கார்டில் பிழை திருத்தி தருவதாகவும், தினசரி அங்கு வரும் பொதுமக்களை அலைக்கழிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

எனவே, அன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதார் கார்டு தொடர்பான பணிகளை வேகப்படுத்த, கோவை மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; மேலும் இ-சேவை மையங்கள் மற்றும் இதர இடங்களில் இதற்க்முகாம்கள் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 14 July 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்