/* */

கோவை வனப்பகுதியில் உடும்பு வேட்டையாடிய இருவர் கைது

கோவை வனப்பகுதியில், உடும்பு வேட்டையாடிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

கோவை வனப்பகுதியில் உடும்பு வேட்டையாடிய இருவர் கைது
X

உடும்பு வேட்டையாடிய இருவர்

கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கன்னிமார் கோவில் சராகப் பகுதியில், வனத்துறையினர் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது இரண்டு நபர்கள், உடும்பை வேட்டையாடியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இருவரும் தப்பியோடி தலைமறைவாகிவிட்டனர். வேட்டையாடிய மூன்று உடும்புகள் மற்றும் வலைகள் கைப்பற்றப்பட்டன.

தப்பியோடிய இருவரையும் கண்டுபிடிக்க, தனிக் குழுக்கள் அமைத்து, தொடர் தேடுதல் வேட்டையில் வனத்துறையினர் ஈடுபட்டனர். இதில் பிளிச்சி கவுண்டனூர் பகுதியை சேர்ந்த இராஜேந்திரன் (41), மணி (42) ஆகியோரை பிடித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். வேட்டையாடியதை இருவரும் ஒப்புக் கொண்டதோடு, வனப்பகுதியில் வேட்டையாடிய இடம் மற்றும் வெட்டுக் கத்தியை மறைத்து வைத்த இடம் ஆகியவற்றை அடையாளம் காட்டினர். பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Updated On: 7 Oct 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  4. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  6. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  7. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  8. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  9. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  10. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?