/* */

விபத்தில் சிக்கியவர்களை தூக்கிச் சென்று காப்பாற்றிய பெண் காவல் ஆய்வாளர்

திடீரென இருசக்கர வாகனத்தின் குறுக்கே நாய் வந்ததால் அதன் மீது மோதிய வேகத்தில் தம்பதியினர் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

HIGHLIGHTS

விபத்தில் சிக்கியவர்களை தூக்கிச் சென்று காப்பாற்றிய பெண் காவல் ஆய்வாளர்
X

ஆய்வாளர் நித்யா

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் இன்று காலை அன்னூர் சென்று விட்டு மேட்டுப்பாளையம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பொகலூர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென இருசக்கர வாகனத்தின் குறுக்கே நாய் வந்ததால் அதன் மீது மோதிய வேகத்தில் தம்பதியினர் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இந்நிலையில் அந்த இருசக்கர வாகனத்தின் பின்னால் சென்று கொண்டிருந்த அன்னூர் காவல் ஆய்வாளர் நித்தியா சம்பவத்தை நேரில் பார்த்ததும், தனது வாகனத்தை உடனடியாக நிறுத்தி இருவரையும் மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தார்.

பின்னர் ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்து வர வைத்த அவர் இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் அன்னூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். தம்பதியினர் அன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின் வீடு திரும்பினர். இந்த காட்சிகள் அருகில் இருந்த பெட்ரோல் பங்க் கண்காணிப்பு காமிராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு காவல் ஆய்வாளர் நித்தியாவிற்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Updated On: 17 Nov 2021 4:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  6. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  7. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  8. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  9. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  10. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை