/* */

திருவிழாவில் மோதிக்கொண்ட இளைஞர்கள்: 100 திருக்குறள் ஒப்புவிக்க சொன்ன போலீசார்

இளைஞர்கள், சுமார் இரண்டரை மணி நேரம் திருக்குறளை மனப்பாடம் செய்து ஒவ்வொருவராக ஒப்புவித்தனர்.

HIGHLIGHTS

திருவிழாவில் மோதிக்கொண்ட இளைஞர்கள்: 100 திருக்குறள் ஒப்புவிக்க சொன்ன போலீசார்
X

திருக்குறள் ஒப்புவித்த இளைஞர்கள்.

கோவை மதுக்கரை அடுத்த மரப்பாலம் பகுதியில் உள்ள ஐயப்பன் கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. அப்போது ஜமாப் இசைக்கு ஏற்ப இளைஞர்கள் நடனமாடிக் கொண்டிருந்த போது, இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. அப்போது இரு தரப்பும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இது குறித்த தகவலறிந்த போலீசார் உடனடியாக விரைந்து வந்து இரு தரப்பையும் சேர்ந்த 10 பேரைப் பிடித்து விசாரணைக்காக மதுக்கரை காவல் நிலையம் அழைத்து வந்தனர். இதையடுத்து, உதவி ஆய்வாளர் கவியரசன் தலைமையில் போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் 100 திருக்குறள்களை மனப்பாடம் செய்து ஒப்புவித்தால், வீட்டிற்கு செல்லலாம் என அறிவுறுத்தப்பட்டனர். இதையடுத்து இளைஞர்கள், சுமார் இரண்டரை மணி நேரம் திருக்குறளை மனப்பாடம் செய்து ஒவ்வொருவராக ஒப்புவித்தனர். இதையடுத்து அனைவருக்கும் அறிவுரை வழங்கிய காவல்துறையினர், அவர்களை எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

Updated On: 28 Dec 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  3. ஆன்மீகம்
    50 கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தமிழில்
  4. ஆன்மீகம்
    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
  5. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 203 கன அடி
  6. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  7. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  8. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  9. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்