/* */

வாளையார் அணையில் மூழ்கி 3 மாணவர்கள் உயிரிழப்பு

தீயணைப்பு துறையினர் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் உடல்களை தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

வாளையார் அணையில் மூழ்கி 3 மாணவர்கள் உயிரிழப்பு
X

உடல்களை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர்.

கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய்(16). இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் சக நண்பர்களான குறிச்சி பகுதியை சேர்ந்த ஆண்ட்ரோ, சுந்தராபுரம் பகுதியை சேர்ந்ந பூர்ணிஸ், ராகுல், பிரணேஷ் ஆகியோருடன் தமிழ்நாடு-கேரள எல்லையில் உள்ள வாளையார் பகுதிக்கு சென்றுள்ளார். 5 பேரும் இன்று மதியம் இரண்டு இரு சக்கர வாகனத்தில், வாளையார் அணையில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். அணையில் குளித்துக் கொண்டிருந்த போது, சஞ்சய், ஆண்ட்ரோ, பூர்ணிஸ் ஆகியோர் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர். பின்னர் மூவரும் திரும்பி வர முடியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதுகுறித்து அவரது நண்பர்கள் வாளையார் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இது குறித்த தகவலின் பேரில் வந்த தீயணைப்பு துறையினர் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் உடல்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து வாளையார் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 27 Sep 2021 3:30 PM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    மாவட்ட ஜெ. பேரவை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!
  2. லைஃப்ஸ்டைல்
    உறவுகள் சூழா வாழ்க்கை ஒரு சாபம்..!
  3. திருப்பரங்குன்றம்
    மதுரையில் அடுத்தடுத்து, விமான சேவை நிறுத்தம் : பயணிகள் அவதி..!
  4. திருப்பூர்
    திருப்பூரில் தொழில் நிறுவனங்களில் வெப்ப அலை தணிப்பு நடவடிக்கைகள்;...
  5. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை உற்பத்தி கட்டமைப்பை மேம்படுத்தத் தயாராக இருக்க அறிவுறுத்தல்
  6. மதுரை மாநகர்
    மதுரை சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், நாளை குருபகவானுக்கு சிறப்பு
  7. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் : அமைச்சர்...
  8. லைஃப்ஸ்டைல்
    மனித உறவுகளின் சந்தோஷத்தை அழிக்கும் மிக மோசமான ஆயுதம் சந்தேகம்!
  9. லைஃப்ஸ்டைல்
    ஏமாற்றாதே ஏமாற்றாதே... ஏமாறாதே ஏமாறாதே..!
  10. லைஃப்ஸ்டைல்
    ‘தாய்வழி உறவில் இன்னொரு தகப்பனாய் ஆதரவு தருபவரே தாய் மாமன்’