/* */

கேரளாவில் கொரோனா தொற்று அதிகரிப்பு ; தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு

நேற்று ஒரே நாளில் 31400 க்கும் மேற்பட்டோருக்கு கேரளாவில் தொற்று ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கேரளாவில் கொரோனா தொற்று அதிகரிப்பு ; தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு
X

கேரள எல்லையில் சோதனை

கொரொனா தொற்று பாதிப்பில் தமிழக அளவில் முதலிடத்தில் இருந்த கோவை, தற்போது கொரொனா தொற்றை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றது. தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் மட்டுமே தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அண்டை மாநிலமான கேரளாவில் தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 31400 க்கும் மேற்பட்டோருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கோவையை அடுத்த தமிழக கேரள எல்லையான வாளையார் சோதனை சாவடியில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கொரொனா நெகட்டிவ் சான்றிதழ், இரு தடுப்பூசி ஊசி போட்டதற்கான சான்றிதழ் , இ பதிவு போன்றவை இருந்தால் மட்டுமே தமிழகத்திற்குள் அனுமதி வழங்கப்படுகின்றது. உரிய சான்றிதழ் இல்லாத நபர்கள் வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பிவிடப்படுகின்றது. உரிய சான்றிதழ்கள் வைத்துக்கொண்டு வாகனங்களில் சமூக இடைவெளி இல்லாமல் அமர்ந்து வருபவர்களுக்கு அபாரதமும் விதிக்கப்பட்டு வருகின்றது. உரிய சான்றிதழ்கள் இல்லாமல் வரும் நபர்களின் வாகனங்கள் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப்படுவதில்லை என கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினர் தெரிவித்தனர். காவல்துறையினர், சுகாதாரத்துறையினர், வருவாய்த் துறையினர் இணைந்து இந்தக் கண்காணிப்பு பணியை மேற்கொண்டுள்ளனர். இதேபோன்று கேரளாவில் இருந்து கோவை மாவட்டத்தின் வழியாக தமிழகம் வரும் 13 சோதனைச் சாவடிகளிலும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உரிய சான்றிதழ் இல்லாத நபர்கள் திருப்பி அனுப்பபட்டு வருகின்றனர்.

Updated On: 26 Aug 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  2. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  3. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  4. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  5. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  8. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  9. இந்தியா
    நடிகை ராஷ்மிகா பாராட்டு! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
  10. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?