/* */

இரிடியம் இருப்பதாக நூதன மோசடி செய்த ஆறு பேர் கைது

பல கோடி ரூபாய் மதிப்பிலான இரிடியம் உள்ளதாக கூறி ஒரு கும்பல் கேரளாவை சேர்ந்தவர்களிடம் ஏமாற்றுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

HIGHLIGHTS

இரிடியம் இருப்பதாக நூதன மோசடி செய்த ஆறு பேர் கைது
X

கைது செய்யப்பட்டவர்கள்.

கோவை ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் உள்ள வீட்டில் வைத்து பல கோடி ரூபாய் மதிப்பிலான இரிடியம் உள்ளதாக கூறி, ஒரு கும்பல் கேரளாவை சேர்ந்த நபர்களிடம் சோதனை செய்து காட்டி வருவதாக செட்டிபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து அங்கு சென்ற போலீசார் வீட்டில் சோதனையிட்டனர். அப்போது அங்கு கட்டுக்கட்டாக கள்ள நோட்டுகள், கவச உடை, ஆக்சிஜன் சிலிண்டர்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து வீட்டில் இருந்த 8 பேரிடமும் போலீசார் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது இரிடியம் மற்றும் ரைஸ் புல்லிங் விற்பனை மோசடிக்கு கூடியிருந்தது தெரியவந்தது.

முதல்கட்ட விசாரணையில் பிடிபட்டவர்கள் ராணிப்பேட்டையை சேர்ந்த தினேஷ்குமார், சூரியகுமார், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த போஜராஜ், கோவையை சேர்ந்த முருகேசன், செந்தில்குமார், வெங்கடேஷ் பிரபு என்பதும் இவர்கள் கேரளாவை சேர்ந்த ரைஸ் புல்லிங் மோசடி கும்பலை சேர்ந்த சாஜி என்பவருடன் சேர்ந்து பணத்தேவை மற்றும் குடும்ப பிரச்சனைகள் காரணமாக ரைஸ் புல்லிங் தேவைப்படுவோரை இடைத்தரர்கள் மூலம் தேர்ந்தெடுத்து இந்த மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. தற்போது கேரளாவை சேர்ந்த மகரூப், அப்துல் கலாம் ஆகிய இரண்டு பேரை அனுகி தங்களிடம் 2 ஆயிரம் கோடி மதிப்பிலான இரிடியம் ரைஸ் புல்லிங் இருப்பாதக கூறிய இந்த கும்பல் பல தவணைகளாக ரூ.27 லட்சம் வரை பணத்தை பெற்றுள்ளனர். ஆனால் அவர்களுக்கு சந்தேகம் ஏற்படாமல் இருக்க இந்த கும்பல் சோதனை செய்து காட்டியும் பணம் பறித்து வந்துள்ளனர்.

சாதாரண வெங்கல செம்பை பெட்டிக்குள் வைத்து, பெட்டிக்குள் மிளகாய் பிரேவை அடித்து வைத்துக் கொள்கின்றனர். பின்னர் வாங்க வருவோரிடம் கவச உடைகளை அணிந்து கொண்டு வெளியே எடுக்கும் போது அந்த இரிடியத்திற்கு சக்தி உள்ளது போல காட்டி ஏமாற்றியதும் கண்டிபிடிக்கப்பட்டது. இந்த கும்பலை 6 பேரையும் பிடித்த போலிசார் அவர்களிடமிருந்து 99.20 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள், இரண்டு கவச உடைகள், ஆக்ஸிஜன் சிலிண்டர் மற்றும் 2 கார்களை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த மோசடியில் ஈடுபட்டு தலைமறைவான கேரளாவை சேர்ந்த சாஜி என்பவரை இரண்டு தனிப்படை அமைத்து போலிசார் தேடி வருகின்றனர்.

Updated On: 21 Oct 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  2. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  3. லைஃப்ஸ்டைல்
    யூரிக் அமிலம் உங்களை வாட்டி வதைக்கிறதா? சர்க்கரை நோயிலிருந்து...
  4. கோவை மாநகர்
    சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
  5. செங்கம்
    செங்கம் அருகே நடந்த சாலை விபத்தில் கணவன்- மனைவி உயிரிழப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    ஆம்லா சாறு: இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் அருமருந்து
  7. செய்யாறு
    செய்யாறு அருகே நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு
  8. தொண்டாமுத்தூர்
    வெள்ளியங்கிரி மலையில் மூச்சுத்திணறல் காரணமாக பக்தர் உயிரிழப்பு
  9. இந்தியா
    ரூ.600 கோடி போதை பொருளுடன் பாகிஸ்தானில் இருந்து வந்த படகு பறிமுதல்
  10. ஈரோடு
    பவானி ஆறு வறண்டதால் ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்...