தக்காளிக்கு விலையில்லை,பொள்ளாச்சியில் குப்பைக்கு போன பரிதாபம் : விவசாயிகள் கவலை..!

no enough price for tomato-பொள்ளாச்சியில் தக்காளியை குப்பையில் வீசிச் சென்ற விவசாயிகள்.
no enough price for tomato-கோவை மாவட்டம் பொள்ளாச்சி,கிணத்துக்கடவு பகுதியில் தக்காளிக்கு உரிய விலை இல்லாததால் விவசாயிகள் குப்பையில் கொட்டிச் சென்றனர். தமிழகத்தில் தக்காளி உற்பத்தியில் பெரும்பங்கு வகிப்பது கோவை மாவட்டம். குறிப்பாக கிணத்துக்கடவு .பொள்ளாச்சி .போன்ற பகுதிகள் ஆகும்.
கிணத்துக்கடவு தக்காளி மார்க்கெட்டில் பெருமளவிலான வியாபாரிகள் வந்து தக்காளி விவசாயிகளிடம் விலைக்கு வாங்கி கேரளா,கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பி வருவது வழக்கம். கடந்த சில மாதங்களாக தக்காளி ஒரு பெட்டிக்கு (15 கிலோ அளவு கொண்டவை) ரூபாய் ஆயிரம் வரை விற்பனையானது.
இன்று இந்த ஒரு பெட்டியின் விலை 50 ரூபாய்க்கு கீழ் சென்றது மேலும் இன்று கிணத்துக்கடவு மார்க்கெட்டுக்கு வியாபாரிகள் வராததால் 50 ரூபாய்க்கும் தக்காளி விற்பனையாகாமல் அப்படியே கிடப்பில் கிடந்தது. இதனால் கவலையடைந்த விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த தக்காளியினை குப்பையில் கொட்டிச் சென்றனர்.
மேலும் அவர்கள் கூறியதாவதுஒரு ஏக்கர் தக்காளி நடவு செய்வதற்கு ரூபாய் 75 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். சரியான விலைக்கு தக்காளி விற்பனை ஆகாததால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசாங்கம் தக்காளிக்கு உரிய விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
குப்பையில் கொட்டிவிட்டு விவசாயிகள் கவலையுடன் சென்றது அதிர்ச்சியளிப்பதாக இருந்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu