/* */

பொள்ளாச்சி அருகே சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

HIGHLIGHTS

பொள்ளாச்சி அருகே  சிறுமி பாலியல் பலாத்காரம்:  வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
X

கோபிநாத்.

கோவை மாவட்டம் ஆழியார் புளியங்கண்டி விநாயகர் கோவில் வீதி சேர்ந்தவர் கோபிநாத். 21வயதான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிணத்துக்கடவு பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவுக்காக உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அங்கிருந்த 14 வயது சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் தற்போது அந்த சிறுமி 6 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் தன்னை கட்டாயப்படுத்தி ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் கோபிநாத்தை கிணத்துக்கடவு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Updated On: 9 Dec 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்