/* */

சேற்றில் வழுக்கி விழுந்த காட்டு யானை உயிரிழப்பு

சிஆர்பிஎப் முகாமிற்குள், கடந்த 6 ம் தேதியன்று ஆண் காட்டு யானை ஒன்று சேற்றில் வழுக்கி விழுந்தது.

HIGHLIGHTS

சேற்றில் வழுக்கி விழுந்த காட்டு யானை உயிரிழப்பு
X

உயிரிழந்த காட்டு யானை.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட சிஆர்பிஎப் முகாமிற்குள், கடந்த 6 ம் தேதியன்று ஆண் காட்டு யானை ஒன்று சேற்றில் வழுக்கி விழுந்தது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் அந்த யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சையில் உடல் நலம் தேறிய நிலையில், வனப்பகுதிக்குள் அந்த யானை சென்றது. அந்த யானையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலையில் வனப்பகுதிக்கு இருந்து சுமார் 250 மீ. தொலைவில் பட்டா நிலத்திற்கு வந்து, யானை மீண்டும் உடல் நலக்குறைவால் படுத்து விட்டது.

இதையடுத்து முதுமலை வனக் கால்நடை மருத்துவர் ராஷேஸ்குமார் மற்றும் கோவனூர் கால்நடை உதவி மருத்துவர் வெற்றிவேல் ஆகியோர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அந்த காட்டு யானை சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தது. இதனைத் தொடர்ந்து யானையை பிரேத பரிசோதனை செய்த வனத்துறையினர், யானையின் உடலை தகனம் செய்தனர்.

Updated On: 9 Nov 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என்னை ஆள்பவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  2. வீடியோ
    மேடையிலேயே Cool Suresh செய்த சேட்டை அதிர்ச்சியில் உறைந்த நடிகைகள்...
  3. வீடியோ
    🔴LIVE :இளைஞர்களின் உணர்வுகளையும்,தியாகத்தையும் சீமான் வியாபாரம்...
  4. வீடியோ
    கதாநாயகி இல்லாத குறையை தீர்த்த Cool Suresh ! #coolsuresh...
  5. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பல்கலையின் தலைவர்களுக்கு திருமணநாள்..! வாழ்த்துகிறோம்...
  6. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  7. ஈரோடு
    புஞ்சை புளியம்பட்டி அருகே அரசு பேருந்தின் மீது கல்வீசி கண்ணாடியை...
  8. ஈரோடு
    அந்தியூர் அருகே மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து டிரைவர் உயிரிழப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
  10. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...