/* */

கோவை விமான நிலையத்தில் 2.2 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்

கோவை விமான நிலையத்தில் 2.2 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

கோவை விமான நிலையத்தில் 2.2 கிலோ   தங்க கட்டிகள் பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்

கோவை விமான நிலையத்தில் நேற்று அதிகாலை 3:00 மணி அளவில், சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறையினர் வழக்கமான சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த இரண்டு பயணிகளை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

இதில், முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனை அடுத்து சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவர்களை சோதனை செய்ததில் உள்ளாடையிலும், உடலிலும் மறைத்து எடுத்து வரப்பட்ட 1.10 கோடி மதிப்புடைய 2.2 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், இருவரும் ராமநாதபுரத்தை சேர்ந்த நசரூதீன் முகமது சகோதரர், கலீல் ரகுமான் முஸ்தபா என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களை கைது செய்த வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், தங்கக் கட்டிகளை யார் கொடுத்து அனுப்பினார்கள்? இதற்கு முன்பு இதே போன்று இவர்கள் தங்கம் கடத்தி வந்த உள்ளார்களா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 30 Dec 2021 3:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. லைஃப்ஸ்டைல்
    தமிழ் SMS மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோமா?
  4. வீடியோ
    PT Sir-க்கும் 😍💖English Teacherக்கும் காதல் ! கல்யாணம் செஞ்ச வச்ச...
  5. லைஃப்ஸ்டைல்
    நண்பா... என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்! - பெஸ்டிக்கு பிறந்த...
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் 23ம் தேதி மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி
  7. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  8. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  9. பட்டுக்கோட்டை
    கோடை பெருமழையில் இருந்து பயிர் பாதுகாப்பு..! விவசாயிகளே கவனிங்க..!
  10. வீடியோ
    பீடிக்காக ஆசைப்பட்டு வழுக்கி விழுந்த SavukkuShankar !#veeralakshmi...