/* */

2 ஆயிரம் குடும்பங்களுக்கு காய்கறி தொகுப்பு -கோவை எம்பி உதவி

பொதுமக்களுக்கு வீடுகளுக்கே வாகனங்கள் மூலம் இலவசமாக விநியோகிக்க மார்க்சிஸ்ட் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

HIGHLIGHTS

2 ஆயிரம் குடும்பங்களுக்கு காய்கறி தொகுப்பு -கோவை எம்பி உதவி
X

காய்கறிகள் தொகுப்பு வழங்கிய கோவை எம்.பி. பி.ஆர். நடராஜன்

கொரோனா பெருந்தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோவை மாவட்டத்தில் பல்வேறு நிவாரண நடவடிக்கைகள் முன்னெடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக எஸ்.எஸ்.குளம் ஒன்றியக்குழுவிற்குட்பட்ட சிவானந்தபுரம் 2 ஆவது கிளையின் சார்பில் ஏழை, எளிய குடும்பங்கள் பயனடையும் வகையில் காய்கறி தொகுப்பு வழங்கப்பட்டது.

சிவானந்தபுரம் பகுதியில் உள்ள 2 ஆயிரம் குடும்பங்கள் பயனடையும் வகையில் தக்காளி, கத்தரி, முட்டைகோஸ், கேரட், பீட்ரூட், முள்ளங்கி உள்ளிட்ட காய்கறிகளை தொகுப்புகளாக பிரிக்கப்பட்டது. இதனையடுத்து அக்கட்சியின் எஸ்.எஸ்.குளம் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பொதுமக்களுக்கு காய் கறி தொகுப்பினை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கொடுத்து துவக்கி வைத்தார். சிவானந்தபுரம் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு வீடுகளுக்கே வாகனங்கள் மூலம் இலவசமாக விநியோகிக்க மார்க்சிஸ்ட் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

Updated On: 11 Jun 2021 9:58 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  2. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  3. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  4. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  5. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  6. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  7. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  8. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  9. ஈரோடு
    அந்தியூரில் மாம்பழ குடோன்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர்
  10. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு