இ.பி.எப் ஓய்வூதியதாரர்கள் மத்திய அரசுக்கு தபால் அனுப்பும் போராட்டம்

ஓய்வூதியத்தை உயர்த்தக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஓய்வூதியதாரர்கள்
கோவை மாவட்டத்தில் பஞ்சாலை மற்றும் என்ஜினியரிங் கம்பெனிகளில் வேலை பார்த்து சுமார் 3 லட்சத்திற்கு மேற்பட்ட ஓய்வூதியதார்கள்கள் உள்ளனர். அவர்கள் இதுவரை ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக ஓய்வூதிய பெற்று வருகின்றனர்.
இதனை உயர்த்தவேண்டும் என கூறி இ.பி.எப் ஓய்வூதியதாரர்கள் நலசங்கம் சார்பாக சென்னையில் கூட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கடந்த ஏப்ரலில் மணியோசை எழுப்பும் போராட்டம் நடந்தது.
தொடர்ந்து மேலும் தமிழகம் முழுவதும் கடந்த 25-ந் தேதி முதல் 30-ம் தேதி வரை பிரதமருக்கு தபால்கார்டு அனுப்பும் போராட்டம் நடந்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இன்று கோவை ஜி.என்.மில்ஸ் தபால் நிலையம் அருகே 100க்கும் அதிகமான இ.பி.எப் ஓய்வூதியதாரர்கள் தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு மாவட்ட தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். அனைவரையும் உறுப்பினர் தேவேந்திரன் வரவேற்றார். சங்க உறுப்பினர் மவுனசாமி சிறப்புரையாற்றினார்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஓய்வூதியத்தை உயர்த்துவதுடன் குறைந்தபட்சம் ரூ.9 ஆயிரம் பஞ்சப்படியுடன் வழங்க வேண்டும். இடைகாலமாக மாதம் ரூ.3 ஆயிரம் பஞ்சப்படியுடன் வழங்கவேண்டும். இ.பி.எப் ஓய்வூதியதாரர்களுக்கு இ.எஸ்.ஐ திட்டத்தை அமுல்படுத்தவேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தகுதியுள்ள அனைவருக்கும், உயர் ஓய்வூதிய வழங்க வேண்டும்.
மூத்த குடிமக்களுக்கு பறிக்கப்பட்ட ரயில் கட்டண சலுகையை மீண்டும் அமுல்படுத்தவேண்டும் என கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து தபால் பெட்டியில் தபால்கார்டுகளை போட்ட னர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu