/* */

கோவையில் கொரோனா உதவி மையமாக மாறிய கட்சி ஆபீஸ்!

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கோவையில் கட்சி அலுவலகம் ஒன்று கொரோனா உதவி மையமாக மாற்றப்பட்டு, பொதுமக்களுக்கு விவரங்கள் அளிக்கப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

கோவையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. நேற்று, கொரோனாவின் ஒருநாள் பாதிப்பில், சென்னையை கோவை முந்தியுள்ளது. கோவையில் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. படுக்கைகள், ஆக்சிஜன் வசதி கிடைக்காமல் நோயாளிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு வழிகாட்ட பல்வேறு தரப்பினரும் உதவி மையங்களை அமைத்து வருகின்றனர். அவ்வகையில் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள, தந்தை பெரியார் திராவிடர் கழக அலுவலகம், கொரோனா பேரிடர் உதவி மையமாக மாற்றப்பட்டுள்ளது.
இம்மையத்தை தபெதிக மற்றும் பாப்புலர் ப்ராண்ட் ஆப் இந்தியா ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்துகின்றனர். இந்த மையத்தை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் துவக்கி வைத்தார். இம்மையத்தை, 7449110884, 9952579108, 9940766109, 9894323590 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டால் மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன் வசதிகள் உள்ளிட்ட விபரங்களை அறிந்து கொள்ள முடியும்.

Updated On: 27 May 2021 8:09 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  2. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  3. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  4. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  7. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  8. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  9. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...