/* */

கேரளாவில் இருந்து ரயிலில் மது கடத்தல்: கோவையில் 3 பேர் கைது

கேரளாவில் இருந்து ரயிலில் மதுபாட்டில்களை கடத்திய 3 பேர் கோவையில் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

கேரளாவில் இருந்து ரயிலில் மது கடத்தல்: கோவையில் 3 பேர் கைது
X

மதுபாட்டில்களை கடத்தி வந்த மூவர், கோவை ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். 

கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், கோவை மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், இப்பகுதி மதுப்பிரியர்கள், மது கிடைக்காமல், பக்கத்து மாவட்டங்களுக்கு படையெடுக்கின்றனர். அதேபோல், பல இடங்களில் மதுக்கடத்தல் நடக்கிறது.

கேரளாவில் மதுக்கடைகள் திறந்து உள்ளதால், அங்கிருந்து கார், இருசக்கர வாகனங்கள் மற்றும் ரயில்களில் மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுகின்றன. அவற்றை, கோவையில் அதிக விலைக்கு மது விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் கேரளா மாநிலத்தில் இருந்து கோவைக்கு வந்த ரயிலில், மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக ரயில்வே போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ரயில்வே போலீசார் அந்த ரயிலின் சோதனை நடத்தினர். அப்போது, ரயிலில் வந்த 3 பேரிடம், 17 மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், மது பாட்டில்களை பறிமுதல் செய்து, பிடிபட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 26 Jun 2021 9:34 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    பா.ஜ.க அழுத்தம் கொடுத்தும் ராஜினாமா செய்யாதது ஏன்? கெஜ்ரிவால்
  2. தேனி
    தேனியில் ஆட்டு இறைச்சி விலை கிடுகிடு உயர்வு!
  3. தேனி
    ஐந்து நாள் மழை பெய்தும் அணைகளுக்கு நீர் வரத்து இல்லை
  4. ஈரோடு
    பவானிசாகர் அணை நீர்மட்டம் 44.50 அடியாக சரிவு
  5. காஞ்சிபுரம்
    கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள வங்கி ஊழியர்..
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. திருவண்ணாமலை
    கோடை கால இலவச தடகளப் பயிற்சி முகாம்
  9. ஆரணி
    போக்ஸோவில் 20 ஆண்டுகள் தண்டனை பெற்றவா் விடுதலை
  10. ஈரோடு
    திம்பம் மலைப்பாதையில் மினி சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து