/* */

வேளாண் சட்டங்களை தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டு விட்டனர்: அண்ணாமலை

வேளாண் சட்டத்தை எதிர்த்து எந்த விவசாயியும் தமிழகத்தில் போராட்டத்தை முன்வெடுக்கவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

HIGHLIGHTS

வேளாண் சட்டங்களை தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டு விட்டனர்: அண்ணாமலை
X

செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை சித்தாபுதூர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், உத்தரபிரதேசத்தில் நடந்தது துயர சம்பவம். அந்த காரை ஓட்டியவர்கள் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் கூறியுள்ளார். இதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்கக்கூடாது. சட்டம் ஒழுங்கை பாதுகாத்து வரும் உத்தரப்பிரதேசம் அரசு, நிச்சயமாக எந்த தரப்புக்கும் பாதிக்காதவாறு முடிவு எடுக்கும். வேளாண் சட்டத்தை எதிர்த்து எந்த விவசாயியும் தமிழகத்தில் போராட்டத்தை முன்னெடுக்கவில்லை.

இந்திய அளவில் எதிர்க்கட்சி, தமிழக அளவில் ஆளுங்கட்சியான திமுக அகில இந்திய பந்திற்கு அழைப்பிற்கு விடுத்த போது கூட, எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. ஏனெனில், சாதாரண மக்கள் யாரும் பங்கு பெறவில்லை. வேளாண் சட்டங்களை தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டு விட்டனர். சில மாநிலங்கள் பஞ்சாப், ஹரியானா, சில விவசாய சங்கங்கள் பிரதமர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றவர்கள் தான் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். போராட்டம் செய்வது அரசியல் கட்சிகள் தான்.

மத்திய அரசை பொருத்தவரை நியாயமான முறையில் எந்த குரல் கொடுத்தாலும் செவி சாய்த்து சரி செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது. இத்தனை ஆண்டுகளாக நன்றாக சென்றுக்கொண்டிருக்கிற கூடங்குளம் அணு உலை, சர்வதேச தரத்தில் அனைத்து பாதுகாப்பு நடைமுறையை பின்பற்றி வரும் நிலையில், எந்த பிரச்னையும் இல்லாத போது பிரச்சினை கிளப்புவது அரசியல் காரணங்கள் தான். பெட்ரோல், டீசல் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். ஜி.எஸ்.டி.,க்குள் கொண்டு வர வேண்டும் என்பது மத்திய அரசின் நிலைப்பாடு. 2016லிருந்து பெட்ரோலிய அமைச்சர் சொல்லி வருகிறார். 5 ஆண்டுகளுக்கு 2017முதல் பெட்ரோல், டீசலுக்கு ஜி.எஸ்.டி.,யில் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது தற்போது முடிவடையும் காலம் வந்துவிட்டது.

அடுத்த கட்டமாக அதை ஜி.எஸ்.டி., க்குள் கொண்டு வர யோசனைகளில் இயங்கி வருகிறது. எதிர்க்கட்சியாக இருக்கும்போது சொன்னவர்கள் தற்போது ஆளுங்கட்சியாக இருப்பதால சொல்லாமல் உள்ளனர். இதை வைத்து, சொல்வது வேறு செய்வது வேறு திமுக என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். திமுக ஒப்புதல் கொடுக்க வேண்டும். நல்ல விஷயம் வரும். பெண்களுக்கு ரூ.1000, கூட்டுறவு வங்கியில் தங்க நகை கடன் தள்ளுபடி என அளித்த முக்கிய வாக்குறுதிகள் எதையும் திமுக நிறைவேற்றவில்லை.

T23 புலி விவகாரத்தை பொருத்தவரை அறிவியல் ரீதியாக அணுக வேண்டும். வனத்துறையின் முடிவு சரியானதாக இருக்கும். அதற்கு கட்டுப்படுவோம். 7ஆம் தேதி காலை 11 மணிக்கு தமிழகத்தில் கோவில்களில் அறப்போராட்டம் நடத்தப்பட உள்ளது. தற்போது சினிமா தியேட்டர் திறக்கப்பட்டு உள்ளது. அனைத்து படங்களும் திரையிடப்படுகிறது. கோவிலுக்கு போவதால் கொரோனா வரும் என்றால், சினிமா தியேட்டர் சென்றால் கொரோனா வராதா? ஸ்கூலுக்கு சென்றால் வராதா? மேலும், வியாழன், வெள்ளி, சனி அடைப்பதால் திங்கட்கிழமை கோவிலில் கூட்டம் அதிகமாக வருகிறது என அவர் தெரிவித்தார்.

Updated On: 5 Oct 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  2. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  3. ஈரோடு
    ஈரோட்டில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 கடைகளுக்கு...
  4. இராஜபாளையம்
    ராஜபாளையம் அருகே திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறந்து வைத்த
  5. ஈரோடு
    எடப்பாடி பழனிசாமி 70வது பிறந்தநாள்: பெருந்துறையில் சர்க்கரைப் பொங்கல்...
  6. தமிழ்நாடு
    அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவு துறை தலைவர் சுற்றறிக்கை
  7. தேனி
    வீரபாண்டி கோவில் திருவிழாவில் ஒரே நேரத்தில் 61 அக்னிசட்டி எடுத்த...
  8. இந்தியா
    ஸ்டாலின் கைது செய்யப்படுவார்: கெஜ்ரிவால் திடீர் கண்டு பிடிப்பு
  9. வீடியோ
    மூன்று வருட திமுக ஆட்சி நிறைவு | சவுக்கு சங்கர் கைது | மக்களின் மனநிலை...
  10. இந்தியா
    4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்