கோவையில் புதிதாக 206 பேருக்கு கொரோனா தொற்று: 3 பேர் உயிரிழப்பு

கோவையில் புதிதாக 206 பேருக்கு கொரோனா தொற்று: 3 பேர் உயிரிழப்பு

கொரோனா பரிசோதனை (பைல் படம்)

கோவையில் புதிதாக 206 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

தினசரி கொரோனா பாதிப்பில் இன்று சென்னை மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. இதனால் கோவை இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது. கோவையில் நேற்றைய தினத்தை விட இன்று 11 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது. கோவையில் இன்று 206 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 33 ஆயிரத்து 228 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 2380 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை மீண்டும் குறையத் துவங்கியுள்ளது.

இன்று கொரோனா தொற்றில் இருந்து 229 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 28 ஆயிரத்து 626 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இன்று 3 பேர் உயிரிழந்தனர். கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2222 ஆக அதிகரித்துள்ளது.

Tags

Next Story