கோவை தெற்கு தொகுதியில் தாமரை மலரும் : வானதி சீனிவாசன்

கோவை தெற்கு தொகுதியில் தாமரை மலரும் : வானதி சீனிவாசன்
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் டாடாபாத் பகுதியில் உள்ள காமராசர் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள பத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், டாடாபாத் பகுதியில் உள்ள காமராசர் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிக்கு வாக்களித்த வந்தார்.. வரிசையில் நின்று வானதி சீனிவாசன் வாக்களித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஜனநாயகத்தில் வாக்களிப்பது தலையாய கடமை எனத் தெரிவித்தார். மக்கள் பணியில் சமரசம் செய்யாதவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் எனவும், வருங்கால தலைமுறை மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு வாக்களிப்பது முக்கியம் என்பதை உணர்ந்து மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார். கோவை தெற்கு தொகுதியில் தாமரை மலரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என வானதி சீனிவாசன் தெரிவித்தார்

Tags

Next Story