கோவையில் புதிதாக 224 பேருக்கு கொரோனா தொற்று; 4 பேர் பலி

கோவையில் புதிதாக 224 பேருக்கு கொரோனா தொற்று; 4 பேர் பலி
X

கோப்பு படம்

கோவையில், நேற்றைய தினத்தை விட இன்று 23 பேருக்கு கூடுதலாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில், நேற்றைய தினத்தை விட இன்று 23 பேருக்கு கூடுதலாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கோவையில் இன்று 224 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதன் மூலம், கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 39 ஆயிரத்து 406 ஆக உயர்ந்துள்ளது.

மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 2225 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. இன்று கொரோனா தொற்றில் இருந்து 197 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 34 ஆயிரத்து 875 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இன்று 4 பேர் உயிரிழந்தனர். கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2306 ஆக அதிகரித்துள்ளது.

Tags

Next Story
scope of ai in future