கோவையில் 445 பேருக்கு கொரோனா தொற்று : 6 பேர் பலி

கோவையில் 445 பேருக்கு கொரோனா தொற்று : 6 பேர் பலி
கோவை மாவட்டத்தில் 445 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது; மொத்தம் 6 பேர் பலியாகி உள்ளனர்.

தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. கோவையில் இன்று 445 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதன் மூலம், கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 21 ஆயிரத்து 415 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டத்தில், மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 2851 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று கொரோனா தொற்றில் இருந்து 585 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 16 ஆயிரத்து 495 பேராக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றால் கோவை மாவட்டத்தில் இன்று 6 பேர் உயிரிழந்தனர். கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2069 ஆக உயர்ந்துள்ளது.

Tags

Next Story