கோவையில் இன்று 223 பேருக்கு கொரோனா தொற்று: ஒருவர் உயிரிழப்பு

கோவையில் இன்று 223 பேருக்கு கொரோனா தொற்று: ஒருவர் உயிரிழப்பு

கொரோனா பரிசோதனை.

நேற்றைய தினத்தை விட இன்று 16 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது.

கோவையில் இந்த வாரத்தில் தினசரி கொரோனா பாதிப்புகள் ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது. கோவையில் நேற்றைய தினத்தை விட இன்று 16 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது. கோவையில் இன்று 223 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 30 ஆயிரத்து 926 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 2180 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது.

இன்று கொரோனா தொற்றில் இருந்து 208 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 26 ஆயிரத்து 558 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இன்று ஒருவர் உயிரிழந்தார். கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2190 ஆக அதிகரித்துள்ளது.

Tags

Next Story