கோவையில் 241 பேருக்கு கொரோனா தொற்று: 2 பேர் உயிரிழப்பு

கோவையில் 241 பேருக்கு கொரோனா தொற்று: 2 பேர் உயிரிழப்பு

கொரோனா பரிசோதனை

கோவை மாவட்டத்தில் இன்று 241 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது: 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் இன்று புதியதாக, 241 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதன் மூலம், கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை, இரண்டு லட்சத்து 26 ஆயிரத்து 647 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டத்தில், மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 3100 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று கொரோனா தொற்றில் இருந்து 425 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 21 ஆயிரத்து 419 பேராக உயர்ந்துள்ளது.

கோவை மாவட்டத்தில், கொரோனா தொற்றால் இன்று 2 பேர் உயிரிழந்தார். இதன் மூலம், கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2128 ஆக உள்ளது.

Tags

Next Story