/* */

மாற்றுத்திறனாளி மாணவனுக்கு காலணி அணிவித்த ஆட்சியர்: கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த குடும்பம்

கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் இழந்த நிலையில் தனக்கு உதவிடுமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து இருந்தார்.

HIGHLIGHTS

மாற்றுத்திறனாளி மாணவனுக்கு காலணி அணிவித்த  ஆட்சியர்: கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த குடும்பம்
X

மாற்றுத்திறனாளி மாணவனுக்கு காலணி அணிவித்த ஆட்சியர் சமீரன்

கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்தவர் மாற்றுதிறனாளியான வேல்முருகன்.இரண்டு குழந்தைகள் உள்ளனர். மூத்த பெண் மகள் அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார்.இவரது இளைய மகன் அழகுமணிக்கு 3 வயதாகிறது.பெட்டி கடை நடத்தி வந்த வேல்முருகன் கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் இழந்த நிலையில் தனக்கு உதவிடுமாறு கடந்த ஜூலை 5ம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து இருந்தார்.

இதனையடுத்து அவரது மனு பரிசீலனை செய்யப்பட்டு மாற்று திறனாளி சிறுவன் அழகுமணி மற்றும் சிறுவனது தந்தைக்கு காலணிகள் வழங்கபட்டது. மேலும் பள்ளி மாணவிக்கு மிதிவண்டி புத்தக பை உள்ளிட்ட உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வழங்கினார். மாற்று திறனாளி சிறுவனுக்கு வாஞ்சையும் காலணிகளை மாவட்ட ஆட்சியர் பொருத்தினார். இதனை கண்ட வேல்முருகனின் குடும்பத்தினர் கண் கலங்கியபடி நன்றி தெரிவித்தனர்.தற்போது வாடகை வீட்டில் வசித்து வரும் தங்களுக்கு குடிசை மாற்று வாதியத்தில் வீடு ஒதுக்கி தர வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கைகள் எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.

Updated On: 30 July 2021 8:31 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  2. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  3. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
  4. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!
  5. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...
  6. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  8. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  9. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...