/* */

கோவையில் 514 பேருக்கு கொரோனா தொற்று - 12 பேர் பலி

தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள கோவையில், இன்று 514 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கோவையில் 514 பேருக்கு கொரோனா தொற்று - 12 பேர் பலி
X

கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்தாலும், தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது.

கோவை மாவட்டத்தில் இன்று 514 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதனால் இதுவரை பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 19 ஆயிரத்து 504 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 4236 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று கொரோனா தொற்றில் இருந்து 942 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 13 ஆயிரத்து 227 பேராக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றால் இன்று 12 பேர் உயிரிழந்தனர். மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2041 ஆக உயர்ந்துள்ளது என்று, சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 30 Jun 2021 3:02 PM GMT

Related News

Latest News

  1. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  2. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  3. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  4. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  6. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  7. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  8. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி