/* */

உலக ரத்த கொடையாளர்கள் தினம்: கோவை ஆட்சியர் உள்ளிட்டவர்கள் ரத்ததானம்

தொற்று காலத்தில் ரத்த தானம் செய்வோர் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக நடந்த சிறப்பு முகாமில், கோவை கலெக்டர் ரத்ததானம் செய்தார்.

HIGHLIGHTS

உலக ரத்த கொடையாளர்கள் தினம்:  கோவை ஆட்சியர் உள்ளிட்டவர்கள் ரத்ததானம்
X

கோவை ஆட்சியர் நாகராஜன் உள்ளிட்ட உயரதிகாரிகள் இரத்த தானம் அளித்தனர்.

குருதி பிரிவுகளை கண்டறிந்த காரல் லாண்ஸ்டெய்னரின் பிறந்தநாளான ஜூன் 14 ம் தேதியான இன்று, ரத்த கொடையாளர் தினமாக உலக சுகாதார நிறுவனம், 2005 முதல் அனுசரித்து வருகிறது. அவ்வகையில் ரத்த கொடையாளர்கள் தினம் இன்று அனுசரிக்கபடுகிறது.

இதனையொட்டி கோவை அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடத்தப்பட்டது. கொரோனா நோய் தொற்று காலத்தில் ரத்ததானம் செய்வோர் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், அது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

இந்த முகாமில் மாவட்ட ஆட்சியர் நாகராஜன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, மாநகர காவல்துறை ஆணையர் தீபக் எம்.தமோர், மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர், கோவை சரக டி.ஜ.ஜி முத்துசாமி, மாவட்ட கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் ஆகியோர் ரத்த தானம் செய்தனர்.

Updated On: 14 Jun 2021 1:48 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  7. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  8. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  9. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  10. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்