/* */

சமூக நீதியை போற்றுவதில் பாஜகவிற்கு ஈடு இணை கிடையாது: எல்.முருகன்

75 ஆண்டுகளில் இல்லாத வகையில் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்களை எதிர்கட்சிகள் ஏன் அறிமுகம் செய்து வைக்க விடவில்லை.

HIGHLIGHTS

சமூக நீதியை போற்றுவதில் பாஜகவிற்கு ஈடு இணை கிடையாது: எல்.முருகன்
X

எல்.முருகன் செய்தியாளர் சந்திப்பு.

மத்திய இணை அமைச்சர் எல். முருகன் மக்கள் ஆசீர்வாத யாத்திரையை இன்று கோவையில் வடகோவை அருகேயுள்ள காமராஜபுரம் பகுதியில் துவக்கினர். இந்த யாத்திரை கோவை, திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நடிகர் குஷ்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், "கடந்த ஜூலை 7 ம்தேதி மத்திய அமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக கூட்டத்தில் பங்கேற்கின்றேன். மக்கள் ஆசி யாத்திரை இந்தியா முழுவதும் நடைபெறுகின்றது. யாத்திரை முழுவதும் மக்களை சந்திக்கின்றோம். சாதாரண, ஏழை விவசய குடும்பத்தை சேர்ந்த என்னை அமைச்சராக்கி இருக்கின்றனர்.

பட்டியல் இனத்தை சேர்ந்த, எந்த அவையிலும் உறுப்பினர் இல்லாத ஒருவர் அமைச்சராக இருப்பது இதுவே முதல் முறை என நினைக்கின்றேன். சமூக நீதியை போற்றுவதில் பா.ஜ.கவிற்கு ஈடு இணை கிடையாது. சாதாரண குடும்பத்தில் இருந்த வந்த எங்களை, பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்து வைப்பார்கள் என ஆர்வத்துடன் இருந்தோம். ஏழை, எளிய, பட்டியல் இனத்தை எங்களை அறிமுகம் செய்து வைக்க கூடாது என கெட்ட எண்ணத்தில் அவையில் காங்கிரஸ், திமுக உட்பட எதிர்கட்சியினர் பிரச்சினையை கிளப்பி அறிமுகம் செய்து வைக்க முடியாத நிலையை ஏற்படுத்தினர்.

75 ஆண்டுகளில் இல்லாத வகையில் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்களை எதிர்கட்சிகள் ஏன் அறிமுகம் செய்து வைக்க விடவில்லை. நாடாளுமன்ற மாண்பை குறைத்தது எதிர்கட்சிகள். கொரொனா விதிகளின் படியே கூட்டம் நடத்துகின்றோம். முதல்வர் நிகழ்விலும் கூட இப்படி கூட்டம் இருக்கின்றது. பத்திரிகை சகோதரர்களுக்கும் என்னை போன்ற பட்டியல் இனத்தவர் அமைச்சரானது பிடிக்க வில்லையோ என தோன்றுகின்றது

பெகாசஸ் என்று இல்லாத ஒன்றை பெரிதாக்குகின்றனர். முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் நடந்த சோதனையை சட்டப்படி எதிர்கொள்வார்கள். திமுக 100நாள் ஆட்சியில் சொன்னதை செய்யவில்லை. 1000 ரூபாய் கொடுப்பதாக சொன்ன அறிவிப்பை நிறைவேற்றவில்லை. கல்விக் கடன் குறித்த அறிவிப்பு இல்லை. சாத்தியம் இல்லாதவற்றை சொல்லி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் திமுக இருக்கின்றது.

கொங்குநாடு விவகாரம் மக்கள் நிலைபாட்டை பொறுத்து இருக்கும். தமிழ்நாடு அரசு தேர்தல் வாக்குறுதியில் சொன்னதால் பெட்ரோல் விலையை குறைத்து இருக்கின்றனர். சர்வதேச விலையை பொறுத்து பெட்ரோல் விலையை பொட்ரோலிய நிறுவனங்கள் நிர்ணயம் செய்யும். அனைத்து சாதியை சேர்ந்தவர்கள் அர்ச்சகராவது புதிதல்ல. பல கோவில்களில் இருக்கின்றனர் என அவர் தெரிவித்தார்.

Updated On: 16 Aug 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் தூய்மை பணியில் ஈடுபட்ட அமைச்சர்
  3. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  4. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  10. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு