சாமி சிலைகளுடன் சுற்றிய 2 பேர் கைது

சாமி சிலைகளுடன் சுற்றிய 2 பேர் கைது

கோயமுத்தூரில் சாமி சிலைகளுடன் சுற்றிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோயமுத்தூர் அரசு மருத்துவமனை அருகே 2 பேர் நேற்றிரவு சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித் திரிந்தனா். அவா்களின் கையில் சாக்குப்பை இருந்தது. இது தொடர்பாக தகவலறிந்த பந்தயசாலை காவல் துறையினர், சம்பவ இடத்துக்கு வந்து அவா்கள் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினா். மேலும் அவா்களிடம் இருந்த சாக்குப்பையை பறிமுதல் செய்து சோதனை செய்தனா்.

அப்போது அதில் வெண்கலத்தினால் செய்யப்பட்ட 2 சாமி சிலைகள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவா்கள் இருவரையும் ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் இருவரும் புலியகுளம் பகுதியை சேர்ந்த முருகன் மற்றும் மதுரையை சேர்ந்த மகேஷ் என்பதும் தெரிய வந்தது. சாமி சிலைகள் திருடப்பட்டதா அல்லது எப்படி கிடைத்தது என்பது குறித்தும் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story