கோவையில் இன்று 474 பேருக்கு கொரோனா: 5 பேர் உயிரிழப்பு

கோவையில் இன்று 474 பேருக்கு கொரோனா:  5 பேர் உயிரிழப்பு
X
கோவை மாவட்டத்தில் இன்று 474 பேருக்கு கொரோனா பெருந்தொற்று கண்டறியப்பட்டுள்ளது; ஒரேநாளில் 5 பேர் உயிரிழந்தனர்.

கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருகிறது. எனினும், தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளில், தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது.

சுகாதாரத்துறை அறிக்கையின்படி, கோவையில் இன்று 474 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால், கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை, இரண்டு லட்சத்து 20 ஆயிரத்து 969 ஆக உயர்ந்துள்ளது.

மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. தற்போது 2996 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து வருகிறது.

இன்று கொரோனா தொற்றில் இருந்து 857 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம், குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, 2 லட்சத்து 15 ஆயிரத்து 910 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் இன்று 5 பேர் உயிரிழந்தனர். இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2063 ஆக உயர்ந்துள்ளது.

Tags

Next Story
the future with ai