கோவையில் இன்று 407 பேருக்கு கொரோனா தொற்று - 7 பேர் பலி

கோவையில் இன்று 407 பேருக்கு கொரோனா தொற்று - 7 பேர் பலி
கோவை மாவட்டத்தில் இன்று 407 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது; ஒரே நாளில் 7 பேர் பலியாகி உள்ளனர்.

தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளில் தொடர்ந்து, கோவை முதலிடத்தில் நீடித்து வருகிறது. கோவையில் இன்று 407 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது.

இதன் மூலம், கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 22 ஆயிரத்து 632 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 3301 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவையில் கடந்த சில நாட்களாக குணமடைந்து வருவோரின் எண்ணிக்கை குறைவதால், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று கொரோனா தொற்றில் இருந்து 298 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 17 ஆயிரத்து 250 பேராக உயர்ந்துள்ளது.

மாவட்டத்தில், கொரோனா தொற்றால் இன்று 5 பேர் உயிரிழந்தனர். இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2081 ஆக உயர்ந்துள்ளது. கோவையில் தொற்று விகிதம் 4.1 ஆக குறைந்துள்ளது.

Tags

Next Story