கோவையில் மார்க்சிஸ்ட் கட்சி தொடங்கிய கொரோனா தொற்று தடுப்பு உதவி மையம்

கோவையில்  மார்க்சிஸ்ட் கட்சி தொடங்கிய கொரோனா தொற்று தடுப்பு உதவி மையம்

மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கோவையில் தொடங்கப்பட்ட கொரோனா தடுப்பு உதவி மையம்.

கோவை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கொரோனா தடுப்பு உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க கோவையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் Left Help center for Covid-19 என்கிற பெயரில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக தொற்றாளர்களை மருத்துவமனையில் சேர்ப்பதற்கும், குணமடைந்தவர்களை இல்லத்திற்கு அழைத்து செல்ல இலவச வாகன சேவையை மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் துவக்கிவைத்தார்.

இந்த உதவி மையத்தின் மூலம் அரசு சிகிச்சை மையங்கள் குறித்த தகவல்கள், நோய் குறித்த விழிப்புணர்வு, தடுப்பூசி மையங்கள் குறித்த விபரம், மருத்துவ ஆலோசனைகள், பாதிக்கப்பட்டவர்களுக்கான தொலை தொடர்பு வழி ஆலோசனை, வாகன உதவி, மற்றும் ரத்த தானம் செய்வது குறித்த விபரங்கள், ஆகிய உதவிகள் செய்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பல்துறை சார்ந்த நண்பர்கள், மருத்துவர்கள், ஆலோசகர்கள், மாற்று மருத்துவ நிபுணர்கள், உள்ளிட்டு கட்சியின் மாவட்ட அளவிலான பல்வேறு அமைப்புகளின் முக்கிய நிர்வாகிகளை தேர்வு செய்து இந்த உதவி மையம் Left Help center for Covid-19 என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தின் உதவியை நாட 94438 84053, 94887 08832, 86800 91826, 99941 58832, 81898 02073 என்கிற இந்த எண்களில் தொடர்பு கொண்டு சேவைகளை பெற்றுக்கொள்ளலாம்.

Tags

Next Story