/* */

கொரோனா கண்காணிப்பு பணிகள்: ஆட்சியர், அமைச்சர் ஆய்வு

ரயில் மூலம் கோவை வரும் பயணிகளிடம் கொரோனா கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கொரோனா கண்காணிப்பு பணிகள்: ஆட்சியர், அமைச்சர் ஆய்வு
X

கோவை ரயில் நிலையத்தில் ஆட்சியர் சமீரன், அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு.

கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த, கோவை மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அத்தியாவசிய கடைகள் தவிர்த்த மற்ற அனைத்து கடைகளும் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கேரளா மாநில எல்லைகள் மற்றும் ரயில் நிலையத்தில் கொரோனா கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கோவை ரயில் நிலையத்தில் ரயில் மூலம் கோவை வரும் பயணிகளிடம் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளிடமும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது இரண்டு தவணை தடுப்பூசி சான்றிதழ் உள்ளதா என்பது குறித்து சோதனை நடத்தப்படுகிறது. இல்லையெனில் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இப்பணிகளை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் மற்றும் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

Updated On: 5 Aug 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  2. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  3. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  4. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...
  5. வீடியோ
    Captain Vijayakanth-க்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது !#captain...
  6. லைஃப்ஸ்டைல்
    கண்முன்னே காணும் கடவுள், 'அம்மா'..!
  7. வீடியோ
    தாமரைக்கும் வாக்களிக்கும் மழலை ! #modi #pmmodi #bjp...
  8. வீடியோ
    INDI Alliance-யை படுகுழிக்கு தள்ள Modi உபயோகித்த அந்த வார்த்தை 😳 |...
  9. லைஃப்ஸ்டைல்
    இசையின் அசைவு நடனம்..!
  10. வீடியோ
    🔴LIVE : சாம் பிட்ரோடா விவகாரம் பொங்கி எழுந்த நாராயணன் திருப்பதி ||...