கோவையில் 498 பேருக்கு கொரோனா தொற்று ; 10 பேர் பலி

கோவையில் 498 பேருக்கு கொரோனா தொற்று ; 10 பேர் பலி

கோவை அரசு மருத்துவமனை

கோவையில் இன்று ஒரேநாளில், 498 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், 10 பேர் பலியாகியுள்ளனர்.

தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளில் கோவை தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. கோவையில் இன்று தொற்று பாதிப்பு 500 க்கும் கீழ் குறைந்துள்ளது.

இன்று 498 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 20 ஆயிரத்து 5 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 3805 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று கொரோனா தொற்றில் இருந்து 922 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 14 ஆயிரத்து 149 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் இன்று 10 பேர் உயிரிழந்தனர். இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2051 ஆக உயர்ந்துள்ளது.

Tags

Next Story