கோவையில் இன்று 366 பேருக்கு கொரோனா தொற்று : 7 பேர் பலி

கோவையில் இன்று 366 பேருக்கு கொரோனா தொற்று : 7 பேர் பலி
கோவை மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 366 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்று 7 பேர் பலியாகி உள்ளனர்.

கோவை மாவட்டத்தில் இன்று, 366 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதன் மூலம், கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 223861 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 3957 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமடைபவர்களின் எண்ணிக்கை குறைவதால், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இன்று கொரோனா தொற்றில் இருந்து 271 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 217812 பேராக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று கோவையில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கொரோனா தொற்றால் இன்று 7 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம், கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2092 ஆக உயர்ந்துள்ளது.

Tags

Next Story