கோவையில் புதிதாக 216 பேருக்கு கொரோனா

கோவையில் புதிதாக 216 பேருக்கு கொரோனா

கொரோனா பரிசோதனை ( பைல் படம்)

கோவை மாவட்டத்தில் இன்று புதிதாக 216 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கோவையில் இன்று மீண்டும் தினசரி பாதிப்பு அதிகரித்து, தொற்று பாதிப்பு 200 ஐ கடந்துள்ளது. கோவையில் நேற்றைய தினத்தை விட இன்று 35 பேருக்கு கூடுதலாக தொற்று ஏற்பட்டுள்ளது.

கோவையில் இன்று 216 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 35 ஆயிரத்து 41 ஆக உயர்ந்துள்ளது.

மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 2118 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை மீண்டும் குறையத் துவங்கியுள்ளது.

இன்று கொரோனா தொற்றில் இருந்து 232 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 30 ஆயிரத்து 671 பேராக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பால் இன்று 3 பேர் உயிரிழந்தார். கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2252 ஆக அதிகரித்துள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story