/* */

கோவை சரக டிஐஜி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

dig vijayakumar suicide: கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கோவை சரக டிஐஜி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
X

கோவை சரக டிஐஜி விஜயகுமார்.

dig vijayakumar suicide:கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஜனவரி மாதம் கோவை சரக டிஐஜி.,யாக விஜயகுமார் பதவியேற்றுக் கொண்டார். மேலும் நீட் மோசடி தொடர்பான வழக்கை விசாரித்து வந்தார்.

கடந்த ஜனவரி மாதம் தான் சென்னை அண்ணாநகர் போலீஸ் துணை ஆணையராக பணியாற்றிய விஜயகுமார், கோவை சரக டிஐஜி.,யாக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். ஜனவரி 7ம் தேதி அவர் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்த நிலையில் கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில் இன்று, டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவரின் உடல் கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே அவர் மன உளைச்சலில் இருந்தாக கூறப்படுகிறது.

விஜயகுமார் கடந்த 2009ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று காவல்துறை பணியில் சேர்ந்தார். பின்னர் காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார்.

சென்னையில் அண்ணா நகர் துணை ஆணையராக பணியாற்றி வந்த இவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோவை சரக டி.ஐ.ஜி.,யாக மாற்றப்பட்டார்.

Updated On: 10 July 2023 8:37 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாரிக்கொடுக்கும் வாட்ஸ்ஆப் மொழிகள்..! தேடி படீங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    சீற்றத்தை அடக்கி ஆளும் சீறாப்புதல்வன், 'மௌனம்'..!
  3. கும்மிடிப்பூண்டி
    தலைமை ஆசிரியர் பணி நிறைவு பாராட்டு விழா!
  4. லைஃப்ஸ்டைல்
    அடிப்படை தேவைகளுக்கு அப்பால்: நடுத்தர வர்க்கத்தின் கனவுகளும்...
  5. வீடியோ
    Savukku Shankar வழக்கில் அதிரடி திருப்பம் | நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
  6. லைஃப்ஸ்டைல்
    இனிய காதல் மேற்கோள்கள்!
  7. லைஃப்ஸ்டைல்
    அமைதி உங்களுக்குள்தான் இருக்கிறது..? வெளியில் ஏன் தேடுகிறீர்கள்..?
  8. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை ஊட்டும் மேற்கோள்கள்: வாழ்க்கையை வெற்றிபெறும் திறவுகோல்!
  9. கவுண்டம்பாளையம்
    கோவை விமான நிலையத்தில் 1.220 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல்
  10. மேட்டுப்பாளையம்
    கோவையில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த இரு வங்கதேச இளைஞர்கள்...