/* */

ஹெலிகாப்டர் விபத்தின் போது நடந்தது என்ன?: வீடியோ எடுத்த போட்டோகிராபர் பேட்டி

ஹெலிகாப்டர் விபத்தில் 13 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு சில நொடிகளுக்கு முன்னர் சுற்றுலா பயணிகளால் எடுக்கப்பட்ட வீடியோ வைரல்.

HIGHLIGHTS

ஹெலிகாப்டர் விபத்தின் போது நடந்தது என்ன?: வீடியோ எடுத்த போட்டோகிராபர் பேட்டி
X

கோவை ராமநாதபுரத்தைச் சேர்ந்த போட்டோகிராபர் ஜோ என்கிற குட்டி.

முப்படை தலைமைத் தளபதி பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி 13 பேர் உயிரிழந்த நிலையில், விபத்திற்கு சில நொடிகளுக்கு முன்னர் சுற்றுலாப் பயணிகளால் எடுக்கப்பட்ட வீடியோ வைரலாகியது. இந்த வீடியோவை பனி மூட்டத்தால் மலைப் பகுதியில் தாழ்வாக செல்வதும் தொடர்ந்து சற்று நேரத்தில் வெடித்து சிதறும் சத்தம் கேட்க, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த நிலையில் அந்த வீடியோவை எடுத்தவர்கள் கோவை ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஜோ என்கிற குட்டி மற்றும் அவருடைய நண்பர் நாசர் ஆகியோர் என்பது தெரியவந்தது.

இது குறித்து பேட்டியளித்த ஜோ, நான் போட்டோகிராபராக வேலை செய்து வருகிறேன். என்னுடைய நண்பர் நாசர் மற்றும் அவருடைய மனைவி, பிள்ளைகளுடன் காட்டேரி வனப்பகுதியில் சுற்றுலா சென்றோம். அப்பகுதி நன்றாக இருக்கும் என்றும் நண்பர்கள் இரயில் தண்டவாளத்தில் நடந்து சென்றோம். சரியாக டிசம்பர் 8ம் தேதி 12.15 மணிக்கு திடீரென ஹெலிகாப்டர் ஒன்று வந்ததால் என்னுடைய மொபைலை எடுத்து வீடியோ எடுத்தேன். ஹெலிகாப்டர் மிகுந்த சத்தத்துடன் வந்ததாலும், நேரில் பார்ப்பதாலும் வியப்பில் வீடியோ எடுத்தேன். பின்பு சிறிது நேரத்தில் விழுந்தது போல் சத்தம் கேட்டது. என்னுடைய நண்பர் நாசர் விழுந்து விட்டதா என கேட்டார். அதற்கு நான் ஆமாம் என்றேன். மிகுந்த அதிர்ச்சி அடைந்து விட்டோம்.

பின்பு அங்கிருந்து நாங்கள் காரில் கிளம்பும் போது 15 நிமிடத்தில் அங்கு ஒரு போலீஸ் ஜீப் ஒன்று வந்தது. அவரிடம் கேட்டதற்கு இங்கே நிற்க வேண்டாம் புறப்படுங்கள் எனக் கூறினார். தொடர்ந்து நானும் என்னுடைய நண்பர் குடும்பத்தினரும் அங்கிருந்து ஊட்டிக்கு புறப்பட்டோம். பின்பு இரவு தான் டிவி பார்த்து தகவலை தெரிந்து கொண்டோம். அதன் பிறகு அன்று இரவே நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றோம். அங்கிருந்து காவல் நிலையத்திற்கு போக சொன்னார்கள். அதன் பிறகு தான் போலீசார் எங்கள் வீடியோவை வெளியிட்டனர் என அவர் தெரிவித்தார்.

Updated On: 10 Dec 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...