Begin typing your search above and press return to search.
கோவை மாநகர்கவுண்டம்பாளையம்கிணத்துக்கடவுமேட்டுப்பாளையம்பொள்ளாச்சிசிங்காநல்லூர்சூலூர்தொண்டாமுத்தூர்வால்பாறை
சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட முயன்ற இருவர் கைது
4.6 கிலோ கஞ்சாவும், 3 செல்போன்களையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
HIGHLIGHTS
கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகில் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருப்பதாக காட்டூர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலிசார் அங்கு சந்தேகத்திற்கிடமாக இருந்த இருவரை விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் இருவரும் கஞ்சா வைத்திருந்தது உறுதியானது. இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர்களின் பெயர் ஜிஸ்னு, சகாபுதீன் என்பதும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடமிருந்து 4.6 கிலோ கஞ்சாவும், 3 செல்போன்களையும் பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.