கோவையில் புதிதாக 140 பேருக்கு கொரோனா
கொரோனா பரிசோதனை பைல் படம்
கோவையில் நேற்றைய தினத்தை விட இன்று 5 பேருக்கு குறைவாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கோவையில் இன்று 140 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது.
இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 43 ஆயிரத்து 732 ஆக உயர்ந்துள்ளது.
மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 1704 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.
இன்று கொரோனா தொற்றில் இருந்து 193 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 39 ஆயிரத்து 671 பேராக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பால் இன்று ஒருவர் உயிரிழந்தார். கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2357 ஆக அதிகரித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu