/* */

முதலமைச்சரின் திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி: அமைச்சர் சாமிநாதன்

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் கிடைத்த வெற்றி தமிழக முதலமைச்சரின் திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி.

HIGHLIGHTS

முதலமைச்சரின்  திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி: அமைச்சர் சாமிநாதன்
X

அமைச்சர் சாமிநாதன் பேட்டியளித்த போது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தி துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர புகைப்பட கண்காட்சி அரங்கை செய்தித்துறை அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் திறந்து வைத்தார். பின்னர் பேரிடர் இன்னல் குறைப்பு தின நிகழ்வினை துவக்கி வைத்து, பேரிடர் காலங்களில் பயன்படுத்தப்படும் உபகரணங்களை நேரில் பார்வையிட்டார். இதையடுத்து செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், நீதிமன்ற உத்தரவுப்படி போலி பத்திரிகையாளர்களை கட்டுப்படுத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட இருக்கின்றது. 90 நாட்களுக்குள் குழு அமைக்க உத்திரவிடப்பட்டு உள்ளது.

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் கிடைத்த வெற்றி தமிழக முதலமைச்சரின் திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி. இந்த குறுகிய காலத்தில் கிடைத்த வெற்றி இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது. இந்த வெற்றி முழுக்க முழுக்க முதல்வரின் நலத்திட்ட உதவிகளுக்கு கிடைத்த வெற்றி. பத்திரிகையாளர்களுக்கு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் உரிய முறையில் வீடுகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்கள் குறித்து நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்க இருக்கும் தனிநபர் ஆணையத்தின் மூலம் பத்திரிகையாளர்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும். தனி நபர் ஆணையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது. 90 நாட்களுக்குள் ஆணையம் அமைக்க உத்திரவிடப்பட்டு இருக்கும் நிலையில், 40 நாட்கள் மட்டுமே முடிந்து இருக்கின்றது. ஆணையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என அவர் தெரிவித்தார்.

Updated On: 13 Oct 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்
  2. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  3. சோழவந்தான்
    சமயநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  4. உசிலம்பட்டி
    மதுரை காமராஜர் பல்கலைக்கழக கழக துணை வேந்தர் ராஜினமா
  5. ஈரோடு
    ஈரோடு கலை அறிவியல் கல்லூரிக்கு ஏ-பிளஸ் அங்கீகாரம் வழங்கியது நாக்...
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு
  7. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ
  8. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு
  9. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  10. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...