/* */

கோவையில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பேராசிரியர் கைது

மாணவிகள் சிலருக்கு இரட்டை அர்த்தத்தில் வாட்ஸ் ஆப்பில் தகவல்கள் அனுப்பி பாலியல் தொல்லை அளித்ததாக புகார் அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

கோவையில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பேராசிரியர் கைது
X

பேராசிரியர் ரகுநாதன்.

கோவை அரசு கலைக்கல்லூரியில் பிஸ்னஸ் அட்மினிஸ்டிரேசன் பிரிவின் துறைத்தலைவராக பணியாற்றி வருபவர் துணை பேராசிரியர் ரகுநாதன். இவர் அப்பிரிவில் பயிலும் மாணவிகள் சிலருக்கு இரட்டை அர்த்தத்தில் வாட்ஸ் ஆப்பில் தகவல்கள் அனுப்புவதாகவும், மாணவிகளின் பொருளாதார நிலையை தெரிந்து கொண்டு, அவர்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக மாணவி ஒருவர் கல்லூரியின் முதல்வரிடம் எழுத்து பூர்வமாக புகார் மனுவை அளித்துள்ளார். இது தொடர்பாக துறை ரீதியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரி நிர்வாகம் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

இந்நிலையில் பாலியல் புகாருக்கு உள்ளான பேராசிரியரை உடனடியாக பணிநீக்கம் செய்யக் கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை அளித்தனர். பேராசிரியர் ரகுநாதன் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.

இதனிடையே பேராசிரியர் ரகுநாதனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பந்தய சாலை காவல் துறையினர் விசாரணை நடத்தினர்‌. விசாரணைக்கு பின்னர் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், பேராசிரியர் ரகுநாதனை கைது செய்தனர். மேலும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

Updated On: 19 Nov 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  2. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  3. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  6. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  7. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  8. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  9. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி முக்கொம்பு மேலணையின் ஷட்டர் பழுதுபார்ப்பு பணி துவக்கம்