/* */

கோடை மழையால் குளிர்ந்தது கோவை: மகிழ்ச்சியில் மக்கள்

கோவையில் மழை பெய்ததால் இதமான சூழல் நிலவியது. இதனால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

HIGHLIGHTS

கோடை மழையால் குளிர்ந்தது கோவை:   மகிழ்ச்சியில் மக்கள்
X

கோவை நகரில் பரவலாக மழை பெய்தது. 

கோவையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், அன்றாடம் பயணிப்பவர்கள், பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், வேலைக்கு செல்பவர்கள் வெயிலின் தாக்கத்தால் மிகவும் கஷ்டப்பட்டு வந்தன.

இந்நிலையில், கடந்த 3 நாட்களாக மாலை நேரங்களில் மேகம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டு வந்தது. இது குறித்து நேற்று வெளியான வானிலை அறிவிப்பில், வெப்பச் சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என கூறியிருந்தனர்.

அதன்படி, இன்று காலை முதலே மேக மூட்டமாகவும் குளிர்ந்த காற்றும் வீசி வந்தது. இந்த நிலையில் திடீரென கோவை காந்திபுரம், கலெக்டர் அலுவலகம், உக்கடம், கணபதி, குனியமுத்தூர், சிங்காநல்லூர், அவினாசி ரோடு, வடவள்ளி, மேட்டுப்பாளையம் சாலை, சாய்பாபா காலனி, ரத்தினபுரி, சரவணம்பட்டி உட்பட பல்வேறு பகுதிகளில் இடியுடன் கோடை மழை பெய்துள்ளது. கோடை வெப்பம் கோவையை வாட்டி வந்த நிலையில், இந்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பயிர்கள் பயிரிட்டுள்ள விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On: 12 April 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என்னை ஆள்பவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பல்கலையின் தலைவர்களுக்கு திருமணநாள்..! வாழ்த்துகிறோம்...
  3. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  4. ஈரோடு
    அந்தியூர் அருகே மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து டிரைவர் உயிரிழப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
  6. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  7. திருத்தணி
    திருத்தணி ஆர்கே பேட்டை அருகே கஞ்சா கடத்திய 3 பேர் கைது
  8. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  9. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  10. நாமக்கல்
    சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகளில் நேஷனல் பப்ளிக் பள்ளி 100 சதவீதம்...