கோவையில் சாதிச்சான்றிதழ்களை கிழித்தெறிந்து மறியல் போராட்டம்

கோவையில் சாதிச்சான்றிதழ்களை கிழித்தெறிந்து மறியல் போராட்டம்

கோவையில் போராட்டத்தில் ஈடுபட்ட வண்ணார் பேரவையினர். 

கோவையில் சாதி சான்றிதழ்களை கிழித்தெறிந்து, வண்ணார் பேரவையினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு தமிழ்நாடு வண்ணார் பேரவையினர் மற்றும் தமிழக வாழ்வுரிமை பாதுகாப்பு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் வண்ணார் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு தமிழக அரசு கொடுக்கப்படும் சாதி சான்றிதழில் வண்ணார் சலவை தொழிலாளர்கள் என்று குறிப்பிட்டுள்ளது.

தாங்கள் செய்யும் தொழிலை அடையாளபடுத்தும் விதமாக இந்த சாதி சான்றிதழில் பெயர் அமைந்துள்ளது. அதனை உடனடியாக நீக்கி இந்து வண்ணார் என்று குறிப்பிட வேண்டும் என்பதை வலியுறுத்தி, சாதி சான்றிதழ்களை கிழித்தெரிந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.

Tags

Next Story